Home » »

Written By www.kovilnet.com on Thursday, 19 August 2010 | 05:10

வல்லிபுர ஆழ்வார் கோவில்,பருத்தித்துறை
வல்லிபுர ஆழ்வார் கோவில் ஈழத்தின் பிரபலமான இந்து ஆலயங்களில் ஒன்று. பருத்தித்துறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தென்கிழக்காக வடமராட்சி கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை வழியில் நெய்தல் பாங்கான இடத்தில் விசாலமான நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சக்கரமே திருமாலின் சின்னமாக வழிபடப்படுவதனால் சக்கரத்தாழ்வார் என்றும் அறியப்படுகின்றார். யாழ்ப்பணத்தில் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருவிழாக்களில் ஒன்றாக வல்லிபுர ஆழ்வார் கோவில் உற்சவம் விளங்குகின்றது. குறிப்பாக தேர் மற்றும் கடல் தீர்த்தம் என்பவை பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்களை ஒன்றுகூட வைக்கும்.


வல்லிபுர ஆழ்வார் கோவிலின் இராஜகோபுரம்

ஆலயம் அமைந்திருக்கும் சூழலில் காணப்படும் நாமக்குளம் (திருமண் எடுக்கப்படும் இடம்), அரிய கிளைகளுடன் கூடிய கற்பகதருக்கள் என்பவை இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புக்களில்சிலவாகும்.

கிளைகளுடன் கற்பகதருக்கள்
வாரத்தில் ஞாயிற்றுகிழமை பூசைகள் விசேசமாக கருதப்படுவதனால் வல்லிபுர ஆழ்வாரின் பக்தர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஞாயிற்றுகிழமைகளில் மாமிசம் உண்பதை தவிர்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆவணி ஞாயிறுகள் விசேசமானவை.

பூகோளவியல் அமைவிடம்: 9° 47' 21.88" வடக்கு (அகலாங்கு), 80° 14' 32.78" கிழக்கு (நெட்டாங்கு)
Share this article :

Post a Comment